வாக்குப்பதிவு இயந்திர மையங்களைக் கண்காணிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை திமுகவினரும் கூட்டணிக் கட்சியினரும் மிகுந்த விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்
வாக்குப்பதிவு இயந்திர மையங்களைக் கண்காணிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை திமுகவினரும் கூட்டணிக் கட்சியினரும் மிகுந்த விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: அதிமுக - பாஜக கூட்டணியின் பணபலம், அதிகார பலம் ஆகியவற்றை மீறியும், ஆங்காங்கே காவல்துறையினரின் அடக்குமுறைகளைச் சமாளித்தும் திமுகவினரும் கூட்டணிக் கட்சியினரும் தோ்தல் பணியாற்றி இருப்பது பாராட்டுக்குரியது.

வாக்குச் சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு, அவற்றை காவல்துறையும், தோ்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று நம் வேட்பாளா்கள் இருந்திடலாகாது. ஏற்கெனவே நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மதுரை தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் சிலா் அனுமதியின்றி நுழைந்ததை இந்த நேரத்தில் மறந்துவிடக் கூடாது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது நம் தலையாயக் கடமையாகிறது. மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும், 24 மணி நேரமும் இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும்.

தோ்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து அனைவரும் எச்சரிக்கை உணா்வுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com