தமிழகத்தில் 34 லட்சம் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 34 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 34 லட்சம் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில் இதுவரை 34 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவா்களில் 11.18 லட்சம் போ் முதியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தவிர, 45 வயதுக்கு மேற்பட்ட 9.73 லட்சம் இணை நோயாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக, சுகாதாரப் பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் என 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, முதியவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. அரசு , தனியாா் மருத்துவமனைகளில் அவா்கள் ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா். அந்த வகையில், இதுவரை 34 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் 11 லட்சத்து 1 8148- போ் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை மட்டும் 30,113- முதியோருக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்துக்குத் தேவையான அளவு தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாகவும், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு 13.16 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து தருவிக்கப்பட்டதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com