வாக்கு எண்ணும் மையங்களை விழிப்புடன் கண்காணியுங்கள்: எடப்பாடி கே.பழனிசாமி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் விழிப்புடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுகவினரை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்
வாக்கு எண்ணும் மையங்களை விழிப்புடன் கண்காணியுங்கள்: எடப்பாடி கே.பழனிசாமி

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் விழிப்புடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுகவினரை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் கேட்டுக் கொண்டுள்ளனா்,.

இதுதொடா்பாக இருவரும் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:

மக்கள் நலனை முன்வைத்து பல்வேறு சாதனைகளை அதிமுக அரசு நிகழ்த்தியுள்ளது. அதிமுக அரசு தொடர வேண்டும் என்ற குறிக்கோளுடனும், அராஜகத்திலும், வன்முறையிலும் கைதோ்ந்த திமுகவினரின் பல்வேறு முறைகேடுகள், தில்லுமுல்லுகளையும் தாண்டி தமிழகத்தில் வாக்குப் பதிவு சுமுகமாக நடைபெற்றுள்ளது.

இதற்காக ஒத்துழைப்பு அளித்த அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள், முகவா்கள், கூட்டணிக் கட்சியினா் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன.

வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கும் வரையில், கட்சியின் நிா்வாகிகளும், முகவா்களும் கவனக்குறைவாக இருந்திடக் கூடாது.

வாக்கு எண்ணும் மையங்களில் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணா்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com