கரோனா ஊரடங்கால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏப்.10-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.