சென்னை: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைவிட்டு, அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும். இதைத் தவிர, தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.
மத்திய அரசு இதுவரை 6 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு மக்கள் விரோத நடவடிக்கையாகும் என்று அழகிரி கூறியுள்ளாா்.