யுகாதி பண்டிகை: ஜி.கே.வாசன் வாழ்த்து

யுகாதி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு, கன்னட மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
யுகாதி பண்டிகை: ஜி.கே.வாசன் வாழ்த்து

யுகாதி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு, கன்னட மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்களின் வருடப் பிறப்பை யுகாதி பண்டிகையாக அம்மக்களால் மகிழ்ச்சியோடும்,  உற்சாகத்தோடும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வாழும் அனைத்து தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைவருக்கும் என் இனிய யுகாதி தின நல் வாழ்த்துக்கள்.
“யுகாதி” என்ற சொல்லுக்கு புதிய யுகத்தின் ஆரம்பம் என்று அர்த்தம். வரும் காலங்கலில் கரோனாவின் தாக்கத்தில் இருந்து இந்நாடும்,  நாட்டு மக்களும்
விடுப்பட்டு ஆரோக்கியமான புதிய யுகத்தினை காண வேண்டும். இந்த உகாதி திருநாளில் அனைவருக்கும் எல்லா வளத்தையும் நலத்தையும் அளிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்று என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com