சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 17,098 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  
சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு
சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு


சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 17,098 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது.

சென்னையில் கரோனா நிலவரம் குறித்து மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 2,67,181 ஆக இருக்கும் நிலையில், இதில் 2,45,751 பேர் குணமடைந்துவிட்டனர். 17 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இதுவரை 4,332 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக, தேனாம்பேட்டையில் 1970 பேரும், அண்ணாநகரில் 1875 பேரும் சிகிச்சையில் உள்ளனர். கோடம்பாக்கம், இராயபுரம், திரு.வி.க. நகர் உள்ளிட்ட மண்டலங்களில் தலா சுமார் 1500 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

மண்டலவாரியாக கரோனா நிலவரம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com