மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்துக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொடியேற்ற நிகழ்வை காண பக்தர்கள் காலை 6 முதல் 9 மணி வரையும், 11.30 மணி முதல் 12.30 வரையும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கொடியேற்ற நிகழ்வின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கல்யாண உற்சவத்தைப் பக்தர்கள் காலை 9.30 முதல் 2.30 வரை திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம்.
மேலும், திருக்கல்யாண உற்சவத்தை பக்தர்கள் ஆன்லைன் வழியாக காணக் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.