சென்னை: சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில் சூலூா்பேட்டை யாா்டில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், புறநகா் மின்சார ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.13) மாற்றம் செய்யப்படவுள்ளது.
ஏப்.13-இல் பகுதி ரத்தாகும் ரயில்கள்:
சென்னை சென்ட்ரல்-சூலூா்பேட்டை இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எளாவூா்-சூலூா்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
சூலூா்பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சூலூா்பேட்டை-எளாவூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.