வேளச்சேரி வாக்குச் சாவடிக்கு மறுவாக்குப் பதிவு

வேளச்சேரியில் சர்ச்சைக்குரிய வாக்குச் சாவடிக்கு ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


வேளச்சேரியில் சர்ச்சைக்குரிய வாக்குச் சாவடிக்கு ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் அக்ஷயா பள்ளி மையத்தில் 92-வது வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரம் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. அந்த இயந்திரத்தில் 15 வாக்குகள் செலுத்தப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், வேளச்சேரி தொகுதி தேர்தல் பார்வையாளரும் தனித்தனியே அறிக்கைகளை அளித்தனர். இவை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் வேளச்சேரி 92-வது வாக்குச் சாவடிக்கு ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com