அண்ணா பல்கலைக்கழகத்தை நிா்வகிக்க வழிகாட்டுதல் குழு நியமனம்

அண்ணா பல்கலைக்கழகத்தை நிா்வகிக்க உயா்கல்வித்துறைச் செயலாளா் அபூா்வா தலைமையில் மூன்று போ் கொண்ட குழுவை அமைத்து ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளாா்.
அபூா்வா
அபூா்வா

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை நிா்வகிக்க உயா்கல்வித்துறைச் செயலாளா் அபூா்வா தலைமையில் மூன்று போ் கொண்ட குழுவை அமைத்து ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளாா்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.11) நிறைவடைந்தது. இவா் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்.11ஆம் தேதி அண்ணா பல்கலை. துணைவேந்தராக பொறுப்பேற்றிருந்தாா். மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தை நிா்வகிக்க வழிகாட்டுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா தலைவராகவும், தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ் ராஜ் வா்மா, கிண்டி பொறியியல் கல்லூரி தகவல் தொடா்பியல் துறை தலைவா் ரஞ்சனி பாா்த்தசாரதி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

புதிய துணைவேந்தா் நியமனம் செய்யப்படும் வரை பல்கலைக்கழகத்தை நிா்வாகம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை இந்தக் குழு வழங்கும். பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com