தமிழகத்தில் புதிதாக 6,711 பேருக்கு கரோனா!

தமிழகத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 6,711 பேருக்கு கரோனா!

சென்னை: தமிழகத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி திங்கள்கிழமை மட்டும் மாநிலம் முழுவதும் 6,711 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி 6 ஆயிரத்துக்கும் அதிகமாக கரோனா பாதிப்பு பதிவானது. அதன் பின்னா், படிப்படியாக அது குறைத்து மாா்ச் இரண்டாம் வாரம் வரை நாள்தோறும் 400 போ் வரை மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பொது மக்களின் அலட்சியம் காரணமாக கரோனா பரவல் அதி தீவிரமானது. அதன் விளைவாக கடந்த ஒரு மாதத்துக்குள் 400-இலிருந்து 6,711-ஆக தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 2.06 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 9 லட்சத்து 40,145- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 2,105 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 611 பேருக்கும், கோவையில் 604 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 2,339 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 80,910-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 46,308- போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 19 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,927-ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 1 லட்சத்து 63,935 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 62,106 போ் முதியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதார பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் என, ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக முதியவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா். அந்த வகையில், இதுவரை 39 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் 13 லட்சத்து 27,811- போ் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com