அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
இன்று முதல் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்களுக்கு நானும் எனது மனைவியும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். வைஷாகி, நவராத்திரி, சங்ரான், விஷூ வாழ்த்துகள். வங்காளம், கம்போடியன், லியோ, மியான்மர், நேபாளம், சிங்களம் , தமிழ், தாய்லாந்து மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.