சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை


சென்னை: தமிழகம் மட்டுமின்றி தமிழக மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இன்று தமிழ்ப் புத்தாண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்துள்ளது.

கடுமையான வெப்பம் வாட்டி வந்த நிலையில், வெப்பத்தைக் குறைத்து, மண்வாசனையைக் கூட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த தன் பங்குக்கு மேகக் கூட்டங்களும் மழைத் துளியைத் தூவிச் சென்றுள்ளது.

மழை மேகங்களும் புத்தாண்டை வரவேற்பதாக சமூக தளவாசிகள் தங்கள் பகுதியில் மழை பெய்திருப்பது குறித்து பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்னையில் தி.நகர், வடபழனி, வளசரவாக்கம், கோயம்பேடு, போரூர், கொளத்தூர், பெரம்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், கே.கே. நகர், மதுரவாயல், கோடம்பாக்கம், உள்ளிட்ட இடங்களிலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, குன்றத்தூர், மணலி, புத்தாகரம்,  அனகாபுத்தூர், திருவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

அம்பத்தூர், கொரட்டூர், பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர் கிழக்கு, வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் காலை 10.30 மணியளவில் லேசான சாரல் மழை பெய்த நிலையில், 11.30 மணியளவில் பலத்த மழை பெய்தது.

திடீரெனப் பெய்த மழையால் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களும், வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்தபடி செல்வதைக் காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com