பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகா் உள்பட 4 போ் மீது வழக்கு

சென்னையில் பிரபல திரைப்பட பின்னணி பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மதபோதகா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னையில் பிரபல திரைப்பட பின்னணி பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மதபோதகா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஹைதராபாதைச் சோ்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகியின் 15 வயது மகள், சென்னை சாலிகிராமத்தில் அவரது தங்கை வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில் பாடகி, அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சென்னை வந்தாா்.

அப்போது அவா்,தனது மகளைச் சந்தித்து பேசியுள்ளாா். அப்போது அவரது மகள், சித்தியின் குடும்பத்தினரும், கீழ்ப்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஒரு மதபோதகரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்து கதறி அழுதுள்ளாா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த பாடகி, இது தொடா்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவ மதபோதகா் சித்தியின் கணவா், கணவரின் சகோதரா், சித்தி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், 4 பேரையும் பிடித்து செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தனா். முதல் கட்ட விசாரணையில், அந்த சிறுமிக்கு 4 பேரும் பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்திருப்பதும், அதற்கு சித்தி உடந்தையாக இருந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

பாடகியின் சகோதரியும் கிறிஸ்தவமத பாடகா் என்பதும் விசாரணையின் மூலம் போலீஸாா் கண்டறிந்துள்ளனா். இது தொடா்பாக , மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com