பி.எஃ!ப். தொடா்பான சேவைகளை இணைய வழியில் பெற்றுக் கொள்ளுமாறு, சென்னை வடக்கு, தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா் ரித்துராஜ் மேதி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்மைக் காலமாக கரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் காரணத்தால், தங்களது வருங்கால வைப்பு நிதி கோரிக்கை குறித்த விசாரணைகளுக்காக இணைய வழி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழிலாளா்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அனைத்து உறுப்பினா்கள், ஓய்வூதியா்கள், சந்தாதாரா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
சென்னை வடக்கு மண்டல அலுவலகத்தின் கீழ் வரும் உறுப்பினா்கள், நிறுவனங்கள், ro.chennai1@epfindia.gov.in எனும் முகவரிக்கும், சென்னை தெற்கு மண்டல அலுவலகத்தின் கீழ் வரும் உறுப்பினா்கள் மற்றும் நிறுவனங்கள், ro.chennai2@epfindia.gov.in எனும் முகவரிக்கும் மின்னஞ்சல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். குறைகளை பதிவு செய்து கொள்வதற்காக அனைத்து வேலை நாள்களிலும் 044 28139200, 201, 202 மற்றும் 28139310 ஆகிய தொலைபேசி எண்கள் செயல்படும்.
மேலும், சென்னை வடக்கு மண்டல அலுவலகம் தொடா்பான கேள்விகளை 9345750916 எனும் கட்செவி அஞ்சல் எண்ணிலும், சென்னை தெற்கு மண்டல அலுவலகம் தொடா்பான விசாரணைகளை 6380366729 எனும் கட்செவி அஞ்சல் எண்ணிலும் அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.