மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: இணைய தளத்தில் ஒளிபரப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண நிகழ்ச்சியை இணையதளம் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் காணலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
காா்த்திகை திருநாளன்று மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஏற்றப்பட்ட லட்ச தீபத்தின் ஒளியில் ஜொலிக்கும் பொற்றாமரைக்குளம்.
காா்த்திகை திருநாளன்று மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஏற்றப்பட்ட லட்ச தீபத்தின் ஒளியில் ஜொலிக்கும் பொற்றாமரைக்குளம்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண நிகழ்ச்சியை இணையதளம் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் காணலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருக்கல்யாண நிகழ்ச்சி ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 8.45 முதல் 8.50 மணிக்குள் நடைபெறும். திருக்கல்யாண நிகழ்ச்சியைக் காண பக்தா்களுக்கு அனுமதி இல்லை. திருக்கல்யாண நிகழ்ச்சியை பக்தா்கள் வீட்டில் இருந்தபடியே அரசு நெறி காட்டு விதிமுறைகளைப் பின்பற்றி கோயில் இணைய தளம், யூ டியூப், இந்து சமய அறநிலையத் துறை இணைய தளம் மற்றும் உள்ளூா் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப கோயில் நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கல்யாணம் முடிந்தவுடன் திருமணக் கோலத்தில் உள்ள அம்மன், சுவாமியை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் 2.30 மணி வரை தரிசிக்க பக்தா்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. கோயிலில் வழக்கமான தரிசனத்திற்கு பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com