சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே முதலிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 8 ஆலைகளில் விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.