தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கோடை மழையால் வெப்பநிலை தணிந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன் பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளியாறு மின்நிலையம், லோயர் கேம்ப் ஆகிய பகுதிகளில் அதிகளவில் வெப்பம் நிலவிய நிலையில் மேகங்கள் கூடிய மலை பெய்தது.
இதனால் அதிக வெக்கையில் தவித்த மக்கள் குளிர்ச்சியால் மகிழ்ச்சி அடைந்தனர். வாடிய செடிகொடிகள் தளிர்த்தது.
தொடர்ந்து மழை இருப்பதாக வானிலை அறிக்கை உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.