ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநருக்கு இன்று (16.4.2021) மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்கள்.
தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதல்வருக்கு ஆளுநர் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
மு.க.ஸ்டாலின்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் மீதும் - தமிழக மக்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் பொதுவாழ்வில் போற்றத்தக்க பணியாற்றியவர். அரசியலிலும் - நிர்வாகத்திலும் பழுத்த அனுபவம் கொண்ட அவர், நான் சந்தித்த நேரங்களில் எல்லாம் என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டியவர்.
அவரது பொதுவாழ்வு மென்மேலும் சிறக்க - ஆரோக்கியத்துடனும், நலமுடனும் பல்லாண்டு வாழ்ந்து - தமிழகத்திற்கும், நம் நாட்டிற்கும் ஆற்றல்மிகுந்த சேவையாற்றிட வேண்டும் என்று இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.