நடிகர் விவேக் மறைவுக்குத் திரைப்படத் துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 5 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: சின்ன கலைவானர் காலமானார்
இந்நிலையில் அவரது மறைவுக்கு திரைப்படத் துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திரைப்படத்தில் நடிப்பதைத் தாண்டி சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் நடிகர் விவேக் என்று நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்கின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக நடிகை கோவை சரளா இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகர் மயில் சாமி, மனோபாலா, ஆடுகளம் நரேன் ஆகியோர் சாலிகிராமத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.