சென்னை: சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் 22,420 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில், சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 2,502 பேரும் தேனாம்பேட்டையில் 2467 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறப்பு விகிதத்தில் தேனாம்பேட்டை 539 பலி எண்ணிக்கையுடன் முதல் இடத்தில் உள்ளது.
ராயபுரத்திலும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,088 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,50,516 ஆகவும், பலி எண்ணிக்கை 4,364 ஆகவும் உள்ளது.
சென்னையில் மண்டலவாரியாக கரோனா நிலவரம்..