உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இளைஞர்கள் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சாம்பள்ளி வட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள சென்றாயம்பட்டி கிராமத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நகைச்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக்கின் மரண செய்தியை கேட்டதும் இந்த கிராம இளைஞர்கள் ஆழ்ந்த துயரம் அடைந்தனர்.
அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், நடிகர் விவேக்கின் இலட்சியத்தை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களுக்கு வேம்பு, அரசன், கொய்யா, பாதாம், எலுமிச்சை, சில்வர் உட்டு என 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பை.சக்தி, பொற்கோவன், தருமன், சக்திமுருகன், சதிஷ்குமார், வேல், பசுபதி, அருன், சுரேஷ், சண்முகம், கீர்த்தி,கானிக் மற்றும் கிராம மக்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.