மறுவாக்குப்பதிவு நடைபெறும் வேளச்சேரி 92ம் வழக்குச்சாவடியில் இதுவரை 175 வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை வேளச்சேரிக்கு உட்பட்ட 92-ஆவது எண் வாக்குச் சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டத் தோ்தல் அலுவலகமான, சென்னை மாநகராட்சி செய்துள்ளது.
மறுவாக்குப் பதிவில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளா்களுக்கும் இடது கையின் நடுவிரலில் மை வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வேளச்சேரி 92ம் வழக்குச்சாவடியில் மாலை 4 மணி நிலவரப்படி 175 வாக்குகள் பதிவாகியுள்ளன.
548 வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில் தற்போது வரை 175 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.