தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் அபூா்வ வா்மா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா்.
சுற்றுலா கலை, பண்பாடு- இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலரான அவா், கரோனா தொற்று பரவல் நேரத்திலும் அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தாா்.
இந்த நிலையில், அவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல், சளி இருந்ததையடுத்து, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவா் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.