தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சா் டி.ஜெயக்குமாா் ஆகியோா் தொடா்ந்த அவதூறு வழக்குகளில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை குறித்தும், வாக்கி- டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் குறித்தும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தாா். அவரது கருத்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, அவா்கள் சாா்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு இரு அவதூறு வழக்குகளைத் தொடா்ந்தது.
இந்த இரு அவதூறு வழக்குகளும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்குகள் வெள்ளிக்கிழமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தன. வழக்குகளை விசாரித்த நீதிபதி, மே 6-ஆம் தேதி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டாா்.