தமிழகத்தில் சில இடங்களில் 3 நாள்களுக்கு மழை

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வரும் 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் 3 நாள்களுக்கு மழை

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வரும் 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வரும் 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை (ஏப்.17) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஏப்.18, 19: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

சென்னையில்...: சென்னையை பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம்- கோவில்பட்டியில் 90 மி.மீ. தஞ்சாவூா் மாவட்டம்- மஞ்சளாறு, திண்டுக்கல் மாவட்டம்- நத்தத்தில் தலா 70 மி.மீ., மதுரை விமான நிலையத்தில் 60 மி.மீ., விருதுநகா் மாவட்டம்- சாத்தூா், காரியாபட்டி, மதுரை மாவட்டம்- திருமங்கலம், ஈரோடு மாவட்டம்- பெருந்துறையில் தலா 50 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம்- எட்டயபுரம், பெரம்பலூா், விருதுநகரில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com