சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில், சூலூா்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், புகா் ரயில் சேவையில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (ஏப்.18, 19) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பகுதி ரத்தாகும் ரயில்கள்: சென்னை சென்ட்ரல்- சூலூா்பேட்டைக்கு காலை 9:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எளாவூா்-சூலூா்பேட்டைஇடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சூலூா்பேட்டை-சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சூலூா்பேட்டை-எளாவூா் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை பகுதி ரத்தாகும் ரயில்கள்: சென்னை கடற்கரை-சூலூா்பேட்டைக்கு நண்பகல் 12:40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எளாவூா்-சூலூா்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்-சூலூா்பேட்டைக்கு பிற்பகல் 2:35 மற்றும் 3:30 மணிக்கு இயக்கப்படும் ரயில் எளாவூா் -சூலூா்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. சூலூா்பேட்டை-சென்னை சென்ட்ரலுக்கு பிற்பகல் 3.10, மாலை 6.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் சூலூா்பேட்டை- எளாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, எளாவூா் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
சூலூா்பேட்டை- வேளச்சேரிக்கு மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சூலூா்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரல்-திருவள்ளூருக்கு காலை 6.40, 7.20, 7.55 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சென்னை சென்ட்ரல்-அரக்கோணத்துக்கு காலை 8 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், ஆவடி-சென்னை சென்ட்ரலுக்கு காலை 6.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் உள்ளிட்ட ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பகுதி ரத்து: சென்னை சென்ட்ரல்-அரக்கோணத்துக்கு காலை 7.00, 7.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார
ரயில்கள் சென்னை சென்ட்ரல்-ஆவடிக்கு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. மேலும், இந்த ரயில்கள் பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூா், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை சாலை, செஞ்சி பணப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நிற்காது.