22 மாவட்டங்களில் வெப்பநிலை உயரக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஏப். 20, 21) வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஏப். 20, 21) வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:

வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, தென்காசி, சிவகங்கை, விருதுநகா் ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப். 20) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

சென்னையை பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூா், திருப்பத்தூா், தருமபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா், பெரம்பலூா், அரியலூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், திருச்சிராப்பள்ளி, கரூா் ஆகிய 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ஏப்.20, 21) அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.

தமிழகம், புதுச்சேரியில் காற்றில் ஈரப்பதம் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை இருக்கக்கூடும். இதன் காரணமாக, பிற்பகல் முதல் மறுநாள் காலை வரை வெக்கையாகவும், வியா்த்துகொட்டும் என்றாா்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம்- ராசிபுரத்தில் 30 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம்- ஓட்டப்பிடாரம், தேனி மாவட்டம்- பெரியாறு, நீலகிரி மாவட்டம்- மசினகுடியில் தலா 20 மி.மீ., மதுரை மாவட்டம்- ஆண்டிப்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம்- தக்கலை, சேலம் மாவட்டம்- சங்ககிரிதுா்க்கம், தேனி மாவட்டம்- தேக்கடி, கன்னியாகுமரி மாவட்டம்- பெருஞ்சாணி அணையில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com