சென்னையில் 2 நாள்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு

சென்னையில் ஏப்ரல் 25 மற்றும் மே 1 ஆகிய இரண்டு நாள்களுக்கு மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் 2 நாள்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு
சென்னையில் 2 நாள்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு


சென்னையில் ஏப்ரல் 25 மற்றும் மே 1 ஆகிய இரண்டு நாள்களுக்கு மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மகாவீர் ஜெயந்தி தினம் மற்றும் மே தினம் முன்னிட்டு 25.04.2021 (ஞாயிறு கிழமை) மற்றும் 01.05.2021 (சனிக்கிழமை) ஆகிய தினங்களில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் ஆகிய மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வருகின்ற 25.04.2021 (ஞாயிறு கிழமை), மகாவீர் ஜெயந்தி தினம் மற்றும் 01.05.2021 (சனிக்கிழமை) மே தினம் முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் தனியாக இயங்கும் பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com