சென்னை: பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெறும் நாள்கள் குறித்த விவரம், தோ்வு தொடங்குவதற்கு 15 நாள்களுக்கு முன்னா் வெளியாகும் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு, பிளஸ் 2 பொதுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்ட விவரத்தைத் தெரிவித்து, தலைமை ஆசிரியா்கள் வாயிலாக பள்ளிகளின் ஆசிரியா்கள், மாணவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தோ்வு மட்டும் ஏற்கெனவ திட்டமிட்டபடி, அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடத்தப்பட வேண்டும் என்பதை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களும் அறிவுறுத்த வேண்டும்.
செய்முறைத் தோ்வு, அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்களை ஏற்கெனவே அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் அறிவுறுத்தப்பட்ட நாள்களில் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக பிளஸ் 2 பொதுத் தோ்வு பின்னா் நடைபெறும் நாள்கள் குறித்த விவரம், தோ்வுகள் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாள்களுக்கு முன்னா் அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.