முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு தலைவர்களும் தொற்றுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்ட வருகின்றனர்.
அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கரோனா தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேசான அறிகுறிகள் இருந்த நிலையில், அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சென்னை, ராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.