புதுச்சேரியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 5 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட இருந்தது. கரோனா பரவல் அதிகரிப்பால் பொதுத்தோ்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் 15 நாள்களுக்கு முன் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுவையில் புதிய உச்சமாக வியாழக்கிழமை ஒரே நாளில் 987 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.