சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 97.55 அடியிலிருந்து 97.57அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1, 342 கன அடியிலிருந்து 1,439 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.73 டிஎம்சி ஆக உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.