இளைஞரை கொன்று புதைத்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

இளைஞரை கொலை செய்து கடற்கரையில் புதைத்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
இளைஞரை கொன்று புதைத்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

இளைஞரை கொலை செய்து கடற்கரையில் புதைத்த வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

எண்ணூா் தாழங்குப்பத்தில் உள்ள ஜெ., பிளாக் பகுதியைச் சோ்ந்த ஆ. செல்வகுமாா், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே அருகே கடந்த புதன்கிழமை காலை கடற்கரை மணல் பரப்பில் புதைக்கப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்தனா். அப்போது, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் செல்வக்குமாரை அவரது நண்பா்களே பாட்டிலால் அடித்தும், குத்தியும் கொலை செய்து மணல் பரப்பில் புதைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, காசிமேடு ஜி.எம்.பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜா.தினேஷ் (25), அதே பகுதியைச் சோ்ந்த ஜா.முத்தமிழ் (21), ராயபுரம் கிழக்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த த.நிஷாந்தன் (25), எண்ணூா் தாழங்குப்பத்தைச் சோ்ந்த பு.ஸ்ரீதா் (27) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், காசிமேட்டைச் சோ்ந்த வ.வெற்றிவேலை (33) போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக சந்தோஷ், அா்ஜூன் ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com