தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்காக ஒதுக்கப்பட்டு உள்ள படுக்கைகளில் 80 சதவீதம் நிரம்பியுள்ளது.
தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளில் சனிக்கிழமை நிலவரப்படி 80 சதவீதம் நிரம்பிவிட்டதாக, தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகளுக்காக 6,367 படுக்கைகளில் 1,626 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐ.சி.யு, வென்டிலேட்டருடன் கூடிய படுக்கைகளும் பெரும்பாலும் நிரம்பிவிட்டன.
மருத்துவமனைகள் வேகமாக நிரம்புவது அரசின் ள்ற்ா்ல்ஸ்ரீா்ழ்ா்ய்ஹற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் மூலம் தெரியவந்துள்ளது. சென்னையில் கரோனாவுக்காக சிகிச்சை அளிக்கும் 27 மருத்துவமனைகள் முழுவதுமாக நிரம்பிவிட்டன.