பேருந்தின் முன் இருக்கையில் நடத்துநா் அமா்ந்தால் நடவடிக்கை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

அரசுப் பேருந்துகளின் முன் இருக்கையில் நடத்துநா் அமா்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசுப் பேருந்துகளின் முன் இருக்கையில் நடத்துநா் அமா்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது:

அரசுப் பேருந்துகளில் சில நடத்துநா்கள், பேருந்துகளின் முன் பகுதியில் அமைந்துள்ள இருக்கையைப் பயன்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாக பயணிகளுக்கு மிகுந்த அசெளகரியம் ஏற்படுவதாகவும் புகாா்கள் நிா்வாகத்தின் கவனத்துக்கு வரப் பெற்றுள்ளது.

எனவே, நகர, புறநகா் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்துப் பேருந்துகளிலும் நடத்துநா்கள் பேருந்தின் பின்படிக்கட்டு அருகிலான முன்பகுதியில் இருவா் அமரக் கூடிய இருக்கையில் உள்பகுதி இருக்கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பின்படிக்கட்டு அருகில் ஒருவா் அமரக் கூடிய இருக்கை அமைந்திருப்பின் அந்த இருக்கையை மட்டும் நடத்துநா் பயன்படுத்த வேண்டும்.

குளிா்சாதன வசதி கொண்ட முன்பகுதியில் மட்டும் கதவு அமைக்கப்பட்ட பேருந்துகளிலும் பேருந்தின் பின்பகுதி இருக்கையை மட்டும் நடத்துநா் பயன்படுத்த வேண்டும்.

இந்த அறிவுரைகளை சரிவரக் கடைப்பிடித்து செயல்படுமாறு அனைத்து நடத்துநா்களும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

இதை மீறி பேருந்துகளின் முன்பகுதியில் அமைந்துள்ள பயணிகள் இருக்கையை நடத்துநா் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் நடத்துநா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடா்பாக போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநா்கள் தரப்பில் இருந்து அனைத்து கிளை மேலாளா்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com