சிதம்பரம் நகர காவல் நிலைய தலைமைக் காவலர் ராஜ்குமார் கரோனாவால் பலியாகிவிட்டார்.
கரோனா பாதித்து சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து விட்டார். இவர் இதற்கு முன்பு, புத்தூர், காட்டுமன்னார் கோயில் வட்ட எழுத்தராக இருந்தவர்.