தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 92 போ் பலியாகியுள்ளனா்.
மாநிலத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 15,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 2.21 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 10,97,672 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 4,250 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,142 பேருக்கும், கோவையில் 1,056 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 13,625 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,76,876-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1,07,145- போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 94 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,651-ஆக அதிகரித்துள்ளது.