சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 2 மையங்களில் நாளை முதல் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்படும்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மையத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை அரசே உரிய விலையில் விற்பதால், சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கள் திரள்வதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.