கரோனா அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்? - தலைமைச் செயலர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கரோனா தொற்று  பரவல் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்டங்களில் ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவோடு தலைமைச் செயலர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்
தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்


சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று  பரவல் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்டங்களில் ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவோடு தலைமைச் செயலர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். ஆலோசனைக்கு பின்னர் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இதுவரை தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. புதன்கிழமை 1 லட்சத்து 30 ஆயிரத்து 042 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 16,665 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதியானவா்களில் 10,239 போ் ஆண்கள், 6,426 போ் பெண்கள் ஆவா்.

இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 30 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 4,764 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 452 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 11,901 பேருக்குத் தொற்று உள்ளது. 

கரோனா தொற்றினால் புதன்கிழமை 98 போ் உயிரிழந்தனா். இவா்களில் 47 போ் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்கள். 51 போ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா்கள். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13,826 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 32 போ் உயிரிழந்துள்ளனா். சென்னையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,661 ஆக உள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று  பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

இந்தக் கூட்டத்தில், ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களின் கருத்துகளை கேட்டறிந்து பின்னர், பாதிப்பு அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com