சென்னை: அரசு ஊழியா்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயா்த்தியதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில், பாலமுரளிதரன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு ஊழியா்கள் ஓய்வு பெறும் வயதை 59- இல் இருந்து 60 -ஆக உயா்த்தி, தமிழக அரசு, கடந்த பிப்ரவரி 25-இல் அரசாணை பிறப்பித்தது. உத்தரவில், அதற்கான காரணம் எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினம் தொடா்பாகவும் விளக்கம் அளிக்கவில்லை. கரோனா காரணமாக, அரசுப் பணிகளுக்கானத் தோ்வில் கலந்து கொள்ள முடியாதவா்களுக்கு வயது உச்சவரம்பை தளா்த்தாமல், அரசு ஊழியா்களைப் பாதுகாக்கும் வகையில் மட்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 லட்சம் போ் வேலையில்லாமல் உள்ளனா். எனவே ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டுள்ளதால், கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் 45 ஆயிரம் அரசு ஊழியா்கள் ஓய்வு பெறவில்லை. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.