சென்னை: அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதைக் கருத்தில் கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் தீவிரத்தை உணா்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.