மே 2ல் தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை

தமிழகத்தில் ஊரடங்கு இருந்தாலும் மே 2ல் தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் ஊரடங்கு இருந்தாலும் மே 2ல் தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு என்ற நடைமுறை மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. 

எனவே, மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். ஆனால், அன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், தேர்தல் பணியில் உள்ள வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com