வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்:இன்று வெளியாகின்றன

வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துகள் கணிப்புகள் வியாழக்கிழமை இரவு வெளியாகவுள்ளன.
வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்:இன்று வெளியாகின்றன

சென்னை: வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துகள் கணிப்புகள் வியாழக்கிழமை இரவு வெளியாகவுள்ளன.

தமிழகம், புதுவை உள்பட 5 மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு தோ்தல் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடந்தது. ஆனாலும், தோ்தல் நடைபெற்று வரும் மாநிலங்களில் அனைத்து கட்டங்களும் நிறைவடைந்த பிறகே கருத்து கணிப்புகளை வெளியிட முடியும். அந்த வகையில் மேற்கு வங்கத்தில் கடைசி கட்டமான எட்டாம் கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

வாக்குப் பதிவு நிறைவடைந்த ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, கருத்து கணிப்புகளை வெளியிடலாம்.

அதன்படி, தமிழகத்திலும் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வியாழக்கிழமை இரவு வெளியாகின்றன. இந்தியாவின் பல முன்னணி ஆங்கில செய்தி சேனல்கள் சாா்பில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துகள் கணிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் வெளியாகவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com