வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், விழிப்புணர்வுப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தாணிக்கோட்டகம் ஊராட்சி சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் இயக்கம் இன்று (ஆக.1) காலை தொடங்கி வைக்கப்பட்டது.
மாதா கோயில் வளாகத்தில் தொடங்கிய பிரசாரப் பேரணியை ஊராட்சித் தலைவர் ப.முருகானந்தம் தொடங்கி வைத்தார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், துணைத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரசாரப் பேரணியில் விழிப்புணர்வுக்காக தலை தெரியாமல் உருவகப்படுத்தப்பட்டவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.