கரோனா: 2 ஆயிரத்தை நெருங்கும் ஒரு நாள் பாதிப்பு

தமிழகத்தில், தினசரி கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கரோனா: 2 ஆயிரத்தை நெருங்கும் ஒரு நாள் பாதிப்பு

தமிழகத்தில், தினசரி கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை மேலும் 1,986 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், அதிகபட்சமாக கோவையில் 246 பேருக்கும், சென்னையில் 204 பேருக்கும், ஈரோட்டில் 165 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 59,597-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து சனிக்கிழமை 2,178 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 25.04 லட்சத்தைக் கடந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 20,716 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 26 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,076-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com