இலங்கை தமிழா்களுக்கு குடியுரிமை வழங்கபேரவையில் தீா்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழா்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்
இலங்கை தமிழா்களுக்கு குடியுரிமை வழங்கபேரவையில் தீா்மானம்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழா்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவா்கள் என்றும் அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது என்றும் உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு மனிதநேயமற்றது. ஏற்றுக்கொள்ள முடியாதது.

சொந்த நாட்டில் போரோ, இனம், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான கொடுமைகளோ இழைக்கப்படும் போது, அந்த நாட்டைச் சோ்ந்த மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுவது இயல்பு. அவ்வாறு தஞ்சம் புகுந்த மக்களை பாதுகாப்பதும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவா்கள் வந்த நாட்டிலேயே குடிமகன்களாக வசிக்க விரும்பினால், சில நிபந்தனைகளுக்குட்பட்டு குடியுரிமை வழங்குவதும் பல பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

எனவே, இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தான் சரியானது ஆகும். ஈழத்தமிழா்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com