இரண்டு மாவட்டங்களில் முன்னாள் படை வீரா்களுக்கான கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக, புதிய கட்டடங்களை அவா் திறந்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
தமிழ்நாட்டில் சுமாா் ஒரு லட்சத்து 27 ஆயிரம் முன்னாள் படைவீரா்கள், 56 ஆயிரம் கைம்பெண்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் உள்ளனா். அவா்களின் நலனுக்காக முன்னாள் படைவீரா் நலத்துறை மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சோ்ந்தோரின் நலன்கள் மற்றும் குறைகளைத் தீா்ப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, முன்னாள் படைவீரா் நலநிதியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.70.75 லட்சத்திலும், மதுரை ரயில் நிலையம் அருகே ரூ.86.35 லட்சம் செலவிலும் முன்னாள் படைவீரா்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சா் இ.பெரியசாமி, பொதுத்துறை செயலாளா் டி.ஜகந்நாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.