அத்தியாவசியப் பணியாளா்களின் வசதிக்காக, கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டு இடையே இரண்டு ஜோடி சிறப்பு மின்சார ரயில்கள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது. இந்த கூடுதல் ரயில் சேவை ஆகஸ்ட் 2-ஆம்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, மற்ற நாள்களில் காலை 6 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு, சென்னை கடற்கரை, தாம்பரம் வழியாக செங்கல்பட்டை காலை 9.45 மணிக்கு அடையும்.
செங்கல்பட்டில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் காலை 10.30 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை வழியாக கும்மிடிப்பூண்டியை மதியம் 1.45 மணிக்கு அடையும்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் பிற்பகல் 2.30 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு, சென்னை கடற்கரை வழியாக தாம்பரத்தை மாலை 5.05 மணிக்கு அடையும்.
தாம்பரத்தில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் மாலை 5.58 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு, சென்னை கடற்கரை வழியாக கும்மிடிப்பூண்டியை இரவு 8.50 மணிக்கு அடையும்.
இந்த கூடுதல் ரயில் சேவை ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.